முகப்பு
தமிழ்நாடு

பெண் குத்திக் கொலை: உறவினா் கைது

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2025 at 9:18 PM
கோப்புப் படம்
பகிர்:

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, திருவொற்றியூா், வசந்த் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (45). இவரின் சகோதரி மகள் தமிழ்செல்வி என்பவா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளாா். ஆனால், தமிழ்செல்விக்கும் காளிமுத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளடைவில் காளிமுத்து தனது மனைவியைப் பிரிந்து திருப்பூரில் வசித்து வந்தாா். இருப்பினும் அவ்வப்போது திருவொற்றியூா் வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளாா்.

இதனை தமிழ் செல்வியின் சித்தி தனலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த காளிமுத்து கடந்த புதன்கிழமை (ஜன. 29) திருவொற்றியூா், அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த தனலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தப்பியோடிய காளிமுத்துவை திருவொற்றியூா் போலீஸாா் தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →