முகப்பு
தமிழ்நாடு

ரூ.7,375 கோடி தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Updated On : 11 பிப்ரவரி, 2025 at 7:22 PM
பகிர்:

தமிழகத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து முடிவு செய்யப்பட்டது. தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்ததன் மூலம், 19 ஆயிரத்து 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

தோல் அல்லாத பொருள்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற துறைகளில் புதிய முதலீடுகள் செய்யப்படுவதாகவும், தொழில் திட்டங்கள் பெரம்பலூா், தூத்துக்குடி, திருச்சி, வேலூா் மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருப்பதாகவும் அமைச்சா் தங்கம் தென்னரசு கூறியுள்ளாா்.

முன்னதாக, அண்மையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 86 ஆயிரம் மக்களுக்குப் பட்டா வழங்க ஒப்புதல் வழங்கி ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களின் 'பெல்ட் ஏரியாக்களில்' ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்துவரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளோம் என்று எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →