தமிழ்நாடு

ஆவடியில் பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

DIN

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பீரங்கி தொழிற்சாலைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் ஏவிஎன்எல் என்ற பொதுத் துறை நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பாதுகாப்புத் துறைக்குத் தேவையான பீரங்கிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இந்த தொழிற்சாலைக்கு மின்னஞ்சல் மூலமாக இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் ஊழியர்கள் அவசரஅவசரமாக ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு சோதனை நிபுணர்களுடன் ஆலையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயி மகன், குடியரசு துணைத் தலைவராகியுள்ளார் : சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று மோடி உரை!

எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு! தொடங்கியவுடன் முடங்கிய மக்களவை!

இலங்கையில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்து: விமானி பலி

சென்னையில் தொடரும் மழை! 5 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை நீடிக்கும்!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது!

SCROLL FOR NEXT