திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பற்றி...
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:30 PM
திருப்பத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள்,வழக்குரைஞர்கள், பணியாளர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:33 PM
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரின் மையப்பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக புதன்கிழமை (பிப். 25) மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள், வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
வேலூரில் இருந்து மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.
summary