நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் 
தமிழ்நாடு

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

DIN

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும் முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றின் அழைப்பிதழில் அவர் பெயரின் கீழ் 'சமூக செயற்பாட்டாளர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி பொறுப்பு இல்லாமல் அழைப்பிதழில் தன் பெயரைக் குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து காளியம்மாளிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'அனைத்திற்கும் விரைவில் பதில் சொல்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலக்கடலை பயிரை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்குரைஞா் கைது

திமுக ஆட்சியில் மா விவசாயிகளுக்கு எந்தத் திட்டமும் தொடங்கவில்லை: எல்.முருகன்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க முறைகேடு வழக்கு: கேரள சிறப்பு புலனாய்வுக் குழு சென்னையில் விசாரணை

SCROLL FOR NEXT