நடிகர் ரஜினிகாந்த் - அமைச்சர் அன்பில் மகேஸ் 
தமிழ்நாடு

அமைச்சர் அன்பில் மகேஸ் - ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்துப் பேசியது குறித்து...

DIN

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்தை அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்துப் பேசினார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பப்படுகின்றனர். இந்தமுறை, மாணவர்கள் 52 பேர் மலேசியா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களுடன் இணைந்துகொள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று சென்னை விமான நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த அன்பில் மகேஸ், அவருடன் பேசியது பற்றி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், ’நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 52 பேர் மலேசியா சென்றுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து கொள்வதற்காக விமான நிலையம் சென்றபோது சூப்பர் ஸ்டார் அவர்களைச் சந்தித்தோம்.

அப்போது "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அரசுப் பள்ளி மாணவர்களை பன்னாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்கின்றோம். அவ்வகையில் இது 8வது பயணம். தற்போது மலேசியா சென்றுள்ளார்கள் மாணவர்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களும் முதன்முறையாக விமானத்தில் பயணிக்கிறார்கள்" என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டோம். தனது ஸ்டைலில் வாழ்த்துகள் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

"தங்களின் வாழ்த்துகளை மாணவர்களிடம் கொண்டு செல்கிறோம். அது அவர்களுக்கு ஊக்கமளிக்கும்" என தெரிவித்து விடை பெற்றோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT