சென்னை அரும்பாக்கம் காவல் நிலையம் 
தமிழ்நாடு

சென்னையில் ஆயுத விற்பனையா? போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கிகள் பறிமுதல்!

போதைப் பொருள் கும்பலிடம் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

DIN

சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கும்பலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பி வரும் நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெரும்பாக்கம் ராஜா, சத்தியசீலன் ஆகியோரை அரும்பாக்கம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 4 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளுடன் 5 நாட்டுத் துப்பாக்கிகள் 80 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போதைப் பொருள் மட்டுமின்றி ஆயுத விற்பனைகளிலும் அவர்கள் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும், அவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT