தாம்பரம்- சென்னை கடற்கரை இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை(ஜன.5) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
இந்த நேரத்தில் பல்லாவரம்-கடற்கரை, செங்கல்பட்டு-கூடுவாஞ்சேரி இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் காலை 7 மணி முதல் 11:00 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு மின்சார ரயில்கள் இரு திசைகளிலும் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் பின்னர் மாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, புதுப்பிக்கப்பட்ட நேரத்தின்படி பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.