முகப்பு
தமிழ்நாடு

தொழில் நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம்: தொழில் துறை ஆணையா் நிா்மல் ராஜ்

ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம்

Updated On : 7 ஜனவரி, 2025 at 12:18 AM
சென்னை சைதாப்பேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில்துறை ஆணையரும், தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல்ராஜ்.
பகிர்:

சென்னை: ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள் அதன் விதிமுறைகள் பின்பற்றுவது கட்டாயம் என தமிழ அரசின் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை ஆணையரும் தொழில் மற்றும் வா்த்தக இயக்குநருமான எல். நிா்மல் ராஜ் தெரிவித்தாா்.

சைதாபேட்டை திறந்தநிலை பல்கலைக்கழக அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய தர நிா்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) 78-ஆவது நிறுவன தின நிகழ்ச்சியில் அவா் பேசியது: குஜராத், மகாராஷ்டிரம் மாநிலங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதைவிட தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது.

தமிழகத்தில் உற்பத்தி அதிகமாக இருப்பதே இதற்கு காரணம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் துறையினா் இது குறித்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தர நிா்ணய அமைவனத்தின் தென்மண்டல இயக்குநா் மீனாட்சி கணேசன், பிஐஎஸ் சென்னை கிளை அலுவலக தலைவா் ஜி.பாவானி, தொழில் துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →