முகப்பு
தமிழ்நாடு

பேருந்து கட்டணம் - 4 மாதங்களில் முடிவெடுக்க உத்தரவு

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 ஜனவரி, 2025 at 12:36 PM
உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்)
பகிர்:

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்துகளின் கட்டணத்தை உயர்த்த உத்தரவிடக்கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

வீராங்கனைகள் தாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது- தமிழிசை

அப்போது கட்டணம் நிர்ணயிக்க உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்துத் துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கட்டண உயர்வு குறித்து 4 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை செயலர் தலைமையிலான உயர்மட்டக் குழுவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →