தமிழ்நாடு

வேலூர் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை!

கைதான மற்றொரு இளஞ்சிறார் குற்றவாளிக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

DIN

வேலூரில் பெண் மருத்துவர் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு வழக்கில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறை விதித்து வேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் பெண் மருத்துவர் ஒருவர், அவரது நண்பருடன் சேர்ந்து திரையரங்குக்கு சென்றுவிட்டு, மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இருவரையும் 5 பேர் சேர்ந்து கடத்தினர். மேலும், கத்தி முனையில் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களிடமிருந்த 2 பவுன் தங்க நகையையும், ரூ. 40,000 பணத்தையும் பறித்து சென்றனர்.

இருப்பினும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கருதிய பெண் மருத்துவர், இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருந்தபோதிலும், ஓரிரு நாள்களில் காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் பெண் புகார் அளித்தார்.

இதற்கிடையே, எதிர்பாராதவிதமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை வேறொரு சம்பவத்திற்காக காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவர்கள்தான் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என்று அறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைதான 5 பேரில் ஓர் இளஞ்சிறாரைத் தவிர்த்து பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கின் 496 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து, கூடுதல் மகளிர் நீதிமன்றத்திலிருந்து விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பார்த்திபன், பரத், மணிகண்டன், சந்தோஷ் ஆகிய நால்வருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, வழக்கில் கைதான இளஞ்சிறாருக்கு நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசைக்கான தேசிய விருது பெறும் ஜி.வி. பிரகாஷ்!

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு 2 தேசிய விருதுகள் அறிவிப்பு

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தேசிய விருது பெற்ற கிங் கான்! சிறந்த நடிகராக ஜவான் ஷாருக்!

சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை வென்ற Parking!

SCROLL FOR NEXT