கோப்புப்படம் 
தமிழ்நாடு

அண்ணா நினைவு நாள்: பிப். 3 முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி!

அண்ணா நினைவு நாள் அமைதிப் பேரணி...

DIN

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, திமுக சார்பில் பிப். 3ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

மறைந்த அண்ணாதுரையின் 56-ஆவது நினைவு நாள், வருகின்ற பிப்ரவரி 3 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சென்னை மாவட்ட திமுக வெளியிட்ட அறிக்கையில்,

“அண்ணாவின் 56வது நினைவு நாளினையொட்டி, முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருனாளர் டி.ஆர்.பாலு மற்றும் திமுக நிர்வாகிகள் பிப்ரவரி - 3, திங்கள்கிழமை காலை 7.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்.

திமுக அமைச்சர்கள், நாடாளுமன்றம் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அஞ்சலி செலுத்த வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT