ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை: கடந்த ஓராண்டில், தேர்வுகளை நடத்தி, தமிழக அரசுப் பணிக்கு இதுவரை 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், கடந்த ஜூன் மாதம் வரை 17,702 பேர் பல்வேறு அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் ஜனவரி 2026ஆம் ஆண்டு வரை நிர்ணயித்த இலக்கை 7 மாதங்களுக்கு முன்பே தேர்வாணையம் எட்டியிருக்கிறது.
இன்னும் கூடுதலாக 2,500 காலிப் பணியிடங்களை நிரப்ப தெரிவுப் பணி நடைபெற்று வருகிறது என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.