ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!
ஜூலை 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது பற்றி...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி(திங்கள்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மேலும் குடமுழுக்கிற்கான பணிகளும் ஏற்பாடுகளும் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர்கோயில் குடமுழுக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) ஒருநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Local holiday for thoothukudi district due to Tiruchendur Arulmigu Subramania Swamy Temple Kumbhabhishekham