தமிழக சட்டப்பேரவை கோப்புப்படம்.
தமிழ்நாடு

பொது வேலை நிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

பொது வேலை நிறுத்தம் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் இந்த வேலை நிறுத்தமானது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்குவதைத் தடுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ள 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துகின்றன.

தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருக்கும் பொது வேலைநிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூலூர் அருகே சிறுத்தை நடமாட்டம்! உடனடியாக பிடிக்க பொதுமக்கள் வேண்டுகோள்!

இலங்கையில் உருவானது டிட்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

SCROLL FOR NEXT