தேர் அச்சு முறிந்து சரிந்தது 
தமிழ்நாடு

பெரம்பலூர் ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி!

ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

பெரம்பலூர் அருகே ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்களுடன் அமைச்சர் சிவசங்கர் தேரை வடம்பிடித்து இழுக்கும்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

வடம் பிடித்து இழுத்த தேரின் அச்சு முறிந்து மற்றொரு தேரின் மீது சாய்ந்ததால், நல்வாய்ப்பாகப் பக்தர்கள் காயமின்றி தப்பினர்.

அமைச்சர் சிவசங்கர் ஏற்பாட்டில், சரிந்த தேரிலிருந்து பொக்லின் உதவியோடு சுவாமி சிலைகளை மீட்டனர். பழைய தேரின் சக்கரங்கள் பழுது என தெரிந்தும் தேரை இழுத்துள்ளதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

There was a commotion near Perambalur when the axle of the Aiyanar temple chariot pulled by Minister Sivashankar broke and collapsed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

மேட்டூர் அணை நிலவரம்!

சமூக ஊடகங்களுக்கான தடை நீக்கம்: இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்!

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT