கோப்பிலிருந்து.. 
தமிழ்நாடு

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து 42 கொட்டகைகள் தரைமட்டம்

திருப்பூரில் சிலிண்டர் வெடித்து தொழிலாளர்கள் தங்கியிருந்த 42 கொட்டகைகள் தரைமட்டமாகின.

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பூரில் வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில், அடுத்தடுத்து இருந்த 42 தகரக் கொட்டகைகள் தரைமட்டமாகின.

திருப்பூரில், கல்லூரி சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நகரில் அடுத்தடுத்து 4 கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், ஒரே இடத்தில், தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 42 கொட்டகை வீடுகள் தரைமட்டமாகின.

42 தகரக் கொட்டகை வீடுகள் தரைமட்டமான நிலையில், அதிலிருந்த தொழிலாளர்களின் உடைமைகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக எரிந்துகொண்டிருக்கும் வீடுகளுக்குள் இருந்த பொருள்களை மக்கள் வெளியற்றி வருகிறார்கள்.

சாயாதேவி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 42 தகரக் கொட்டகைகள் அமைத்து வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த நிலையில் இன்று விபத்து நேரிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வைகை அணையிலிருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

காலாவதியான திரையரங்குகள்... டீசல் இயக்குநர் ஆதங்கம்!

இன்றே கடைசி நாள்! பிகார் காங். தலைவர் வேட்புமனு தாக்கல்!

ஹாங் காங்கில் விமான விபத்து: இருவர் பலி!

ரஷிய எண்ணெய் இறக்குமதி தொடர்ந்தால் வரி தளர்வு இல்லை! -இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

SCROLL FOR NEXT