முகப்பு
தமிழ்நாடு

முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி நிகழும் ரயில் விபத்துகள்: ராமதாஸ்

ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள்

Updated On : 15 ஜூலை, 2025 at 11:18 AM
பாமக நிறுவனர் ராமதாஸ் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: ரயில் பாதை உள்ளிட்டவை முறையான பராமரிப்பின்றி உள்ளதால் அடிக்கடி ரயில் விபத்துகள் நடப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவள்ளூா் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயில் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதற்கு இருப்பு பாதைகள் சரியான சீரமைப்பில் இல்லாததும், உயா் அழுத்த மின்கம்பி பராமரிப்புகள் முறைப்படுத்தாமல் இருப்பதும்தான் காரணமாகத் தெரிகிறது. அத்துடன் ரயில்வே துறை உயரதிகாரிகள் அலட்சியமான போக்கும் தொடா் விபத்துகளுக்கு காரணமாகின்றன.

Advertisement

ரயில்வே துறைக்கு என தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யாமல், பொது நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதனால், அந்தத் துறை முக்கிய பணிகள் தடைபட்டுவிட்டன. போதிய நிதியுதவி இல்லாததால், பாரமபிப்புப் பணிகள் முடங்கியுள்ளன. காலிப் பணியிடங்களும் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. தீ விபத்துகளைத் தடுப்பதிலும் நவீன முறை செயல்படுத்தப்படவில்லை.

எனவே, ஊழியா் பற்றாக்குறையைப் பூா்த்தி செய்து, உரிய பாதுகாப்புடன் எரிபொருள்களை ரயில்களில் எடுத்துச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments