முகப்பு
தமிழ்நாடு

அவதூறு வழக்கில் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகியதைப் பற்றி...

Updated On : 17 ஜூலை 2025, 5:30 pm IST
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை
பகிர்:

திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர். பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஜூலை 17) நீதிமன்றத்தில் ஆஜரானார்.

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வெளியிட்ட “டி.எம்.கே. ஃபைல்ஸ்” எனும் குற்றச்சாட்டுகளில், தனக்கு எதிராகப் பொய்யான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர் மீது திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.

இதுகுறித்து, அவர் தொடர்ந்த வழக்கில், உரிய ஆதாரங்கள் இன்றி தனது பெயருக்கு தீங்கிழைக்கும் நோக்கில், அண்ணாமலை அவதூறு கருத்துக்களைப் பரப்பி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று (ஜூலை 17) வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், டி.ஆர். பாலு ஆஜராகவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவின் மூத்த தலைவர் டி.ஆர். பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ள பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவர் வழக்கம்போல் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்ததாக விமர்சித்துள்ளார்.

summary

Former BJP state president Annamalai appeared in court today (July 17) in a defamation case filed by DMK's T.R. Balu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments