வீரா, சின்னஞ்சிறு கிளியே, கெட்டி மேளம் படம் - இன்ஸ்டாகிராம்
தமிழ்நாடு

முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இத்தொலைக்காட்சியில் சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் ஒளிபரப்பாவதால், இன்று முதல் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் இல்லத்தரசிகளை மட்டுமின்றி, இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற தொலைக்காட்சித் தொடர்களுக்குப் போட்டியாக பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து தொடர்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜீ தமிழில் சாயா சிங், செளந்தர்யா ரெட்டி நடிப்பில் கெட்டி மேளம் தொடரும், வைஷ்ணவி, அருண் நடிப்பில் வீரா தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த இரு தொடர்களின் ஒளிபரப்பு நேரமும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கெட்டி மேளம் தொடர் இரவு 6.30 மணிக்கும், வீரா தொடர் இரவு 7.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது. சின்னஞ்சிறு கிளியே என்ற புதிய தொடர் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதால், மற்ற இரு தொடர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர், ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் திருமணமாகி வாழச் செல்லும் நாயகியை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதனால்,

ஸ்வாதிகா நாயகியாகவும், ரெளத்திரம் சையத் நாயகனாகவும் இத்தொடரில் நடிக்கின்றனர். இவர்களுடன், மதுமிதா, அபிதா, ஆறுமுக வேலு, காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதையும் படிக்க | காதலியை அறிமுகப்படுத்திய சீரியல் நடிகர்!

GettiMelam Veera serial time change Chinnanjiru Kiliye

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT