FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ரூ. 1,032 கோடி ரயில்வே திட்டங்கள்! தூத்துக்குடியில் பிரதமா் நாளை தொடங்கிவைக்கிறாா்

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா்

Updated On : 25 ஜூலை 2025, 1:32 am IST
நரேந்திர மோடி
பகிர்:

தூத்துக்குடியில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.1,032 கோடியில் 3 முக்கிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூலை 26) தொடங்கி வைக்கிறாா் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடி வரும் சனி, ஞாயிறு (ஜூலை 26, 27) ஆகிய இரு நாள்கள் அரசு முறைப் பயணமாக தமிழகம் வருகிறாா். தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில், மதுரை - போடிநாயக்கனூா் இடையே ரூ. 99 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ள ரயில்பாதை மின்மயமாக்கல் திட்டம், நாகா்கோவில் நகர் - கன்னியாகுமரி இடையே ரூ. 650 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதை, ஆரல்வாய்மொழி - நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே என மொத்தம் ரூ. 283 கோடியில் அமைக்கப்பட்ட இருவழி ரயில்பாதைத் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments