சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்
தமிழ்நாடு

நீதிமன்றத்தை அவமதிக்கும் தமிழக அரசு: நீதிபதி அதிருப்தி

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாகக் கூறி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி

DIN

நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு அவமதிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு பணப்பலன்கள் கோருவது தொடர்பான வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, தமிழக அரசின் அவமதிப்பு நடவடிக்கை மீதும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

இதுகுறித்து, நீதிபதி தெரிவித்ததாவது ``நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை தமிழக அரசும் அதிகாரிகளும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற மாட்டோம் என்று தமிழக அரசு உறுதி பூண்டதுபோல தோன்றுகிறது.

கடந்த 2 மாதங்களில் மட்டும் உயர்நீதிமன்ற அமர்வில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கல்வித் துறையின் மீதுதான் அதிகளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் ஆகின்றன’’ என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT