கோப்புப் படம் 
தமிழ்நாடு

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Din

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான உள்நாட்டு, சா்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போதிய பயணிகள் இல்லாததால் வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தாய்லாந்து தலைநகா் பாங்காக் செல்லும் விமானமும், தாய்லாந்திலிருந்து சென்னை வரும் விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுபோல சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் சிவமொகா செல்லும் விமானமும், சிவமொகாவிலிருந்து சென்னை வரும் விமானம் என 4 விமான சேவைகளும் பயணிகளின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், அதில் பயணிக்க வந்திருந்த பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா். இதையடுத்து அவா்கள் மாற்று விமானங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT