முகப்பு
தமிழ்நாடு

மார்ச் 12-ல் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.

Updated On : 10 மார்ச் 2025, 1:09 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மாசி மகத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நாளை மறுநாள்(மார்ச் 12) உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார்.

கும்பகோணம் மகாமக குளத்தில் நடக்க உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமான சேவைகள்!

இதனை ஈடுசெய்யும் வகையில் மார்ச் மார்ச் 29 ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் மகா மகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மார்ச் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments