தமிழக அரசு 
தமிழ்நாடு

திருத்தணி மார்க்கெட்டுக்கு காமராசர் பெயர்: தமிழக அரசு அறிவிப்பு!

திருத்தணி மார்க்கெட்டுக்கு ’பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி’ என பெயரிடப்படும்.

DIN

திருத்தணி நகராட்சியில் ரூ.3.02 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மார்க்கெட் கட்டடத்திற்கு "பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி" எனப் பெயரிட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சி ம.பொ.சி சாலையில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான காமராஜர் நாளங்காடி 81 கடைகளுடன் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.

இதையும் படிக்க: எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500, இளைஞர்களுக்கு ரூ. 5000: பாமக நிழல் பட்ஜெட்!

பழைய மார்க்கெட் தற்போதைய மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லாததாலும் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்ததாலும் பழைய கட்டடத்தினை இடித்து, அப்புறப்படுத்தி 97 கடைகளுடன் புதியதாக நாளங்காடி கட்டுவதற்கு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.3.02 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை எண்.(4D) 35, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 18.08.2023-ல் வெளியிடப்பட்டது.

அதன்படி, கட்டப்படும் நாளங்காடியின் அனைத்து பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளன. புதியதாக கட்டப்பட்டுள்ள நாளங்காடிக்கு "பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி" என்று பெயரிட தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே கடவுப் பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து: பள்ளி மாணவா்கள் 8 போ் காயம்

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாரம்பரிய சுற்றுலா பயணம்

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் இளைஞா் கைது

சீருடைப் பணியாளா்கள் தோ்வு: காவல் துறை சாா்பில் விளம்பரப் பதாகை

SCROLL FOR NEXT