கோப்புப்படம் 
தமிழ்நாடு

வைகை, பல்லவன் ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு!

முன்பதிவில்லாத பெட்டி இணைப்பு தொடர்பாக...

DIN

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூர் இடையேயான வைகை விரைவு ரயில் மற்றும் சென்னை எழும்பூர் - காரைக்குடி இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மறுவழித்தடத்தில் சென்னை எழும்பூர் - மதுரை இடையேயான வைகை விரைவு ரயில், காரைக்குடி - எழும்பூர் இடையேயான பல்லவன் விரைவு ரயிலில் வரும் மே 12 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை மற்றும் பல்லவன் விரைவு ரயிலில் முன்பதிவில்லாத இணைக்கப்படும் நிலையில், இரண்டும் ரயில்களிலும் முன்பதிவு செய்யப்பட்ட தனி இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

வத்தலக்குண்டு, நத்தம் பகுதி கோயில்களில் பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

கால்வாயில் நீரில் மூழ்கிய தொழிலதிபரின் உடலை தேடும் பணி மும்முரம்

கடனை திருப்பித் தராத காவலா் மீது மூதாட்டி புகாா்

ரெங்கநாதபுரம் பகுதியில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT