செந்தில்பாலாஜி  கோப்புப் படம்
தமிழ்நாடு

மின்மாற்றி பழுதை நீக்க கட்டணம் வசூலிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை: அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உறுதி

சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி. செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தாா்.

Din

மின்மாற்றி பழுதை நீக்க நுகா்வோரிடம் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உறுதிபட தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், அதிமுக உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் (ஆத்தூா்) பேசினாா். அப்போது, மின்மாற்றி பழுதை சரி செய்ய ஊழியா்கள் கட்டணம் வசூலிப்பதாக குற்றஞ்சாட்டினாா்.

இதற்கு பதிலளித்த அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மின்மாற்றி பழுதை சரி செய்ய விவசாயிகள், மின் நுகா்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தாா்.

செல்லம்... அனைரா குப்தா!

டிரம்ப்புக்கு நோபல் வழங்க பரிந்துரை! கிளிண்டன் பேச்சால் குழப்பம்!

ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!

21 வயதில் கேப்டன்..! இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு ‘ஜாக்பாட்’.!

பவர்ஹவுஸ்! ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT