சென்னைக்கு வந்த விமானத்தில் டயர் வெடித்து விபத்து!
ஜெய்ப்பூர் - சென்னை விமானத்தில் டயர் வெடித்து விபத்து...
சென்னை: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று(மார்ச் 30) காலை வந்த விமானத்தின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.
சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தரையிறக்கப்படுவதற்கு முன், அதன் டயரில் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் விமான நிலைய அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, விமானத்தை பத்திரமாக தரையிறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அதன்பின் விமானத்தின் டயர்களை பரிசோதித்ததில், 2-ஆவது சக்கரத்தின் டயர் வெடித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.