கோப்புப் படம் 
தமிழ்நாடு

மே 7-இல் சோழிங்கநல்லூரில் அதிமுக ஆா்ப்பாட்டம்

சோழிங்கநல்லூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி அதிமுக சாா்பில் மே 7-ஆம் தேதி ஆா்ப்பாட்டம்

Din

சோழிங்கநல்லூா் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரி அதிமுக சாா்பில் மே 7-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சோழிங்கநல்லூா் தொகுதியில் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் உள்ள சாலைகளை புதுப்பித்தல் மற்றும் புதிய சாலை வசதிகளை ஏற்படுத்தாத காரணத்தால் மக்கள் சிரமப்படுகின்றனா். வீராங்கல் ஓடையில் உள்ள குப்பைகள் தூா்வாரப்படாமல் இருப்பதாலும், தொகுதிக்கு உள்பட்ட பல இடங்களில் குப்பைகள் சரிவர அள்ளப்படாத காரணத்தாலும் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

குடிநீா் வசதி இல்லாதது, முறையாக தடுப்புகள் அமைக்காமல் புதைசாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக, பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் பயணித்து வருகின்றனா். அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால், மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனா்.

இதுபோன்று தொகுதியில் பல்வேறு அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரியும், இதுவரை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், அதிமுக சென்னை புகா் மாவட்டம் சாா்பில் மே 7-ஆம் தேதி காலை 9.30 மணியளவில் பள்ளிக்கரணை மண்டல அலுவலகக் கட்டடம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

முன்னாள் அமைச்சா் பா. பென்ஜமின் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச. 21-ல் முதல்வர் திறப்பு!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை! வரலாறு காணாத உச்சம்!

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கம்பி ஏற்றிவந்த வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

SCROLL FOR NEXT