முகப்பு
தமிழ்நாடு

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம்! முதல்வர் ஸ்டாலின்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் பதிவு...

Updated On : 7 மே, 2025 at 12:28 PM
முதல்வர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், தமிழக முதல்வர் வெளியிட்ட பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.