மு.க.ஸ்டாலின்  
தமிழ்நாடு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக இன்று பேரணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

Din

இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தனது தலைமையில் சென்னையில் சனிக்கிழமை (மே 10) பேரணி நடைபெறும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போா் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும். அதை வெளிப்படுத்தும் வகையில், சென்னை டிஜிபி அலுவலகத்திலிருந்து எனது தலைமையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்குப் பேரணி நடைபெறும். தீவுத் திடல் போா் நினைவுச் சின்னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

மக்களுக்கு அழைப்பு: இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அா்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பேரணி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்களும் இந்தப் பேரணியில் பங்கேற்று ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT