உதகை அரசினா் தாவரவியல் பூங்காவில் உருவாக்கப்பட்டுள்ள மலா் அலங்காரம். (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

DIN

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி வருகிற மே 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர்க் கண்காட்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதையடுத்து அன்றைய தினம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக மே 31 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னதாக, மலா்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக திங்கள்கிழமை உதகைக்கு வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மூவர் காயம்

குற்றவாளி என தீர்ப்பு! நீதிமன்றத்தில் தனித்துவிடப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT