ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு. 
தமிழ்நாடு

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

மத்திய அமைச்சர் அமித் ஷா அழைக்காதது குறித்து ஓபிஎஸ் பேச்சு...

DIN

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்துவிட்டோம்.

மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றிப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT