ஆம்னி வேன் விழுந்த கிணறு.  
தமிழ்நாடு

சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது.

DIN

தமிழகம் முழுவதும் சாலை ஓரங்களில் உள்ள பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவு பறந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது. கிணறு முழுவதும் தண்ணீா் இருந்ததால், காா் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியது.

இந்த சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 5 போ் நீரில் மூழ்கி பலியாகினா். அதில், கொ்சோம், சைனிகிருபா, ஜெரின்எஸ்தா் ஆகியோா் கதவைத் திறந்து நீந்தி வெளியே வந்தனா்.

சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், காா் மற்றும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தையும் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

ஈரோட்டில் முதிய தம்பதி கொலை- மூவரிடம் விசாரணை

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு இல்லாத இடங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சாத்தான்குளம் அருகே சாலையோரத்தில் இருந்த கிணற்றில் ஆம்னி வேன் நேற்று விழுந்த விபத்தில் 5 பேர் பலியானதையடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT