முகப்பு
அமைச்சர் ராஜேந்திரன்.
தமிழ்நாடு

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர்: அமைச்சர் ராஜேந்திரன்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர்: அமைச்சர் ராஜேந்திரன்

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

Updated On : 26 மே, 2025 at 7:25 AM
அமைச்சர் ராஜேந்திரன்.
பகிர்:

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

வருகிற ஜூன் 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்காக பிரம்மாண்டமாக மேடை அமைக்கும் பணி சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜூன் 11-ல் முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வருகை தர உள்ளார்.

கல்விக்காக ரூ. 3,400 கோடியைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்?

அன்று இரவு அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர் ஜூன் 12 காலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலை மைதானத்திற்கு வரும் அவர், லட்சம் பேருக்கு ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து பதில் அளித்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →