11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!
11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு குறித்து...
உயர்கல்வித் துறை கட்டப்பட்டுள்ள 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
உயர்கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்டம் - பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் - குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், சென்னை மாவட்டம் - ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் - விக்கிரவாண்டியில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் செங்கல்பட்டு மாவட்டம் - செய்யூர், சிவகங்கை மாவட்டம் - மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் - முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் - கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் - ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இந்த 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க: ’நேற்று முளைத்த காளான்’: விஜய்யை விமர்சித்த அமைச்சர் சேகர் பாபு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.