முகப்பு
தமிழ்நாடு

ஐஓசி - எஸ்.ஏ. கல்லூரியின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா!

இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் எஸ்.ஏ. கல்லூரியின் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா...

Updated On : 1 நவம்பர் 2025, 4:14 pm IST
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவில் கலந்துகொண்டவர்கள்... - DIN
பகிர்:

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி இந்தியன் ஆயில் நிறுவனம், எஸ்.ஏ. கல்லூரியுடன் இணைந்து சைக்கிள் பேரணி(சைக்ளோத்தான்) நடத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாத இறுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தின் ஒரு பகுதியாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், திருவேற்காடு எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி (SACAS) உடன் இணைந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வை நேற்று(அக். 31) கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தது.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழாவில் கலந்துகொண்டவர்கள்... - DIN

இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர், அவர்கள் கல்லூரி வளாகத்தைச் சுற்றியுள்ள கிராமங்களை உள்ளடக்கிய 12 கி.மீ. பாதையில் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தி, மக்களிடையே விழிப்புணர்வு, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை பற்றிய செய்தியைப் பரப்பினர்.

Advertisement

Advertisement

இந்நிகழ்ச்சியில், மத்திய கலால் துறையின் உதவி ஆணையர் எஸ். இருதயராஜன், ஐஆர்எஸ், தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

எஸ்.ஏ. கல்லூரியின் முதல்வர் டாக்டர் மாலதி செல்வக்குமார், கல்லூரியின் இயக்குநர் டாக்டர் வி. சாய் சத்தியவதி, இந்தியன் ஆயில்-தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் (கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்) வி. வெற்றிசெல்வக்குமார், இந்தியன் ஆயில்-தெற்கு மண்டல பொது மேலாளர் (ஊழல் கண்காணிப்பு) டி. சுரேஷ் குமார், இந்தியன் ஆயில்-தெற்கு மண்டல துணை பொது மேலாளர் ஏ. ஆர். சிவகுமார் மற்றும் இந்தியன் ஆயில்-தெற்கு மண்டல துணை பொது மேலாளர் எம். பாஸ்கர் மற்றும் நிகழ்வின் மீடியா பார்ட்னர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பிரமுகர்கள், ஊழல் தடுப்பு கண்காணிப்பு என்பது வெறும் இணக்க வழிமுறை மட்டுமல்ல, செயல்பாட்டின் அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மை, நியாயம் மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு வாழ்க்கை முறை என்று எடுத்துரைத்தனர். பேச்சாளர்கள், மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் நெறிமுறை, நடைமுறைகளைப் பின்பற்றவும், தங்கள் சமூகங்களுக்குள் ஒருமைப்பாட்டின் தூதர்களாக மாறவும் ஊக்குவித்தார்கள்.

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஸ்லோகன் எழுத்து, சுவரொட்டி தயாரித்தல், கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெற்றது.

இந்தியன் ஆயில் மற்றும் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்த தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த விழிப்புணர்வு நிகழ்வை மேற்கொண்டுள்ளது. இளைஞர்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதில் நிறுவனங்களுக்கு இடையிலான வலுவான கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

எஸ்.ஏ. கல்லூரி முதல்வர் டாக்டர் மாலதி செல்வக்குமார், இதுபோன்ற அர்த்தமுள்ள முயற்சிகள் மூலம் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு மற்றும் குடிமை ஈடுபாட்டை வளர்ப்பதில் இந்தியன் ஆயில் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

summary

IndianOil Organises Vigilance Awareness Cyclothon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.