எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.
இந்தநிலையில் ராமேஸ்வரம் அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லைத் தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து கைதான 14 மீனவர்களும் இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள விசாரணை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக நவம்பர் 3-ஆம் தேதி 35 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.