தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் ENS
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 5 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம்: தேர்தல் ஆணையம் தகவல்

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்து தேர்தல் ஆணையம் தகவல்...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 78.09% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தற்போது வரை 5 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

லட்சத்தீவில் முழுவதுமாக எஸ்.ஐ.ஆர். படிவங்கள் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கோவாவில் 99.99%, அந்தமான் நிக்கோபாரில் 89.22% பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும்

சத்தீஸ்கர், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளத்தில் 49.55%, புதுச்சேரியில் 93.04% படிவங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்களில் 37 கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய அறிக்கை...

78 percent SIR forms distributed in Tamil Nadu: Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்றே பூங்காற்றே... ரகுல் ப்ரீத் சிங்!

தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

கானாவில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் கூட்டநெரிசல்! 6 பேர் பலி!

குடியிருப்புக்குள் உலா வந்த காட்டு யானை! மக்கள் அச்சம்!

பி என் காட்கில் ஜுவல்லர்ஸ் 2-வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

SCROLL FOR NEXT