அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோப்புப் படம்
தமிழ்நாடு

மேகதாதுவில் அணைக்கு திட்ட அறிக்கை! முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்!

மேகதாதுவில் அணை விவகாரத்தில் மௌனம் காத்ததாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இணையதளச் செய்திப் பிரிவு

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், திமுக மௌனம் காத்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டின் ஜீவநதி காவிரி. காவிரி நதி நீரை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இருக்கிறது. மேலும், 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க இன்றைய தினம் உச்சநீதிமன்ற அனுமதி அளித்துள்ளது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் உள்ள நம் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் தில்லியில் 2024, பிப்ரவரி முதல் தேதியில் நடைபெற்றபோது, கூட்டத்தின் விவாதப் பொருளில் மேகதாது அணை விவகாரத்தை காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடகம் கோரியபோதே, திமுக அரசு மௌனமாக இருந்ததையும் நான் கண்டித்துள்ளேன்.

அனைத்தையும் மீறி, உச்சநீதிமன்றத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பு வருவதற்கு, கர்நாடகத்தில் உள்ள தங்களுடைய குடும்பத் தொழிலை காப்பதற்காக உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும். தமிழகத்தின் உரிமையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 3 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!

Edappadi Palaniswami slams DMK Govt for their actions in Mekedatu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க நோ்காணல்

விசாரணை கைதிகளை நல்வழிப்படுத்த நீதிபதிகள் நூல்கள் அளிப்பு

அரியலூரில் பனை விதைகள் நடும் இயக்கம் தொடக்கம்

தத்தனூரில் நவ.18-இல் வேலைவாய்ப்பு முகாம்

வாக்குச்சாவடி அலுவலா்களை திமுகவினா் மிரட்டுவதாக புகாா்

SCROLL FOR NEXT