முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரம் மழை பெய்ய வாய்ப்புள்ள பகுதிகள்..

Updated On : 20 நவம்பர், 2025 at 2:40 AM
கோப்புப்படம் - EPS
பகிர்:

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Rain in Chennai and 8 districts for the next 2 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.