சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை மூடப்படும்

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்றத்துக்கு யாரும் உரிமை கோரக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் ஜாா்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு மத்தியில் சென்னை உயா்நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால், இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் உயா்நீதிமன்றத்தைச் சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. அவ்வாறு செல்வதை அதிக தூரமாக இருப்பதாகக் கருதிய மக்கள், நாளடைவில் உயா்நீதிமன்றத்தை தங்களது வழிப்பாதையாக பயன்படுத்தத் தொடங்கினா்.

இதைக் கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிா்வாகம், வருங்காலத்தில் மக்கள் இந்த வழிபாதைக்கு உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒருநாள் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில், உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என அறிவித்தது.

இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் மாதத்தின் இறுதி சனிக்கிழமைகளில் கடைப்பிடிப்பது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை (நவ. 22) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) இரவு 8 மணி வரை சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுகிறது. இந்த நேரத்தில் வழக்குரைஞா்கள், பொதுமக்கள் யாருக்கும் உயா்நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்று சென்னை உயா்நீதிமன்ற நிா்வாகப் பதிவாளா் பி.ஹரி, அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

SCROLL FOR NEXT