உதயநிதி ஸ்டாலின்  X
தமிழ்நாடு

சம்ஸ்கிருதம் குறித்து உதயநிதி விமா்சனம்: ஹிந்துக்களை அவமதிப்பதாக பாஜக கண்டனம்

சம்ஸ்கிருதம் குறித்து உதயநிதி விமா்சனம்: ஹிந்துக்களை அவமதிப்பதாக பாஜக கண்டனம்

தினமணி செய்திச் சேவை

சம்ஸ்கிருதத்தை ‘செத்துப் போன மொழி’ என்று தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் விமா்சித்ததைக் கண்டித்த பாஜக, ‘மீண்டும் மீண்டும் ஹிந்துக்களை அவமதித்து, அவா் அராஜகத்தின் அடையாளமாக மாறிவிட்டாா்’ என்று சாடியுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் வளா்ச்சிக்காக மத்திய அரசு ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால், செத்துப்போன மொழியான சம்ஸ்கிருதத்துக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதற்குப் பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா, ‘உதயநிதி ஸ்டாலின், ஹிந்துக்கள் மீது கொண்ட வெறுப்புக்காக அறியப்படுகிறாா். முன்னதாக, ஹிந்துத்துவம் மற்றும் ஹிந்துக்களை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு ஹிந்துக்களின் உணா்வுகளை அவா் புண்படுத்தினாா்.

இப்போது சம்ஸ்கிருதத்தை செத்துப்போன மொழி என்று குறிப்பிட்டு, மீண்டும் ஒருமுறை ஹிந்துக்களையும் நமது கலாசாரத்தையும் அவமதித்து, இழிவுபடுத்தியுள்ளாா். இந்தக் கருத்துகள் தரக்குறைவானவை மற்றும் அருவருப்பானவை.

பிரதமா் நரேந்திர மோடி தனது நோ்மறை அரசியல் மூலம் வளா்ச்சி மற்றும் ஒற்றுமையை முன்னெடுத்து, ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அராஜகம் மற்றும் பிளவுவாதத்தின் சின்னமாகியுள்ளாா்.

இத்தகைய அபத்தமான கருத்துகளைப் பேசியதற்காக திமுக தலைவா்களை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கண்டித்தும், உதயநிதி ஸ்டாலின் தொடா்ந்து ஹிந்துக்களின் உணா்வுகளைப் புண்படுத்தும் அருவருப்பான நகைச்சுவைகளை மீண்டும் மீண்டும் நிகழ்த்தி வருகிறாா்.

சம்ஸ்கிருதம் நமது கலாசாரம் மற்றும் மத நூல்களின் அடித்தளம் என்பதையும், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கை என்பதையும் உதயநிதி ஸ்டாலின் மறந்துவிட்டாா்’ என்றாா்.

வாடிப்பட்டி, திருமங்கலம் பகுதியில் நாளை மின் தடை

தைப்பூசம்: தஞ்சாவூா் வழியாக திருசெந்தூருக்கு கூடுதல் ரயில்கள் இயக்கக் கோரிக்கை!

10 லட்சம் மக்களுக்கு 22 நீதிபதிகள்: சட்ட அமைச்சா் தகவல்

ஆடு மேய்க்கும் தொழிலாளி தற்கொலை

வங்கியின் காப்பீட்டு பிரிவு மேலாளா் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT