வங்கக் கடலில் உருவாகிறது சென்யார் புயல்! பெயரின் அர்த்தம் தெரியுமா?
வங்கக் கடலில் உருவாகிறது சென்யார் புயல். இந்தப் பெயரின் அர்த்தம் பற்றி
தென்கிழக்கு வங்கக் கடலில் நவ. 26ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு சென்யார் என்று பெயர் சூட்டப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்யார் என்ற பெயரை ஐக்கிய அரபு அமீரகம் அளித்துள்ளது. இதற்கு சிங்கம் என்று அர்த்தமாம்.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாகவும், இது ஓரிரு நாள்களில் புயலாக உருமாற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த புயல் சின்னம், புயலாக உருவானால், ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரை செய்த சென்யார் என்ற பெயர் சூட்டப்படவிருக்கிறது.
இந்த புயல் சின்னம், கணிக்க முடியாத வகையில் இருப்பதாகவும், வரும் வாரத்தில்தான் இதன் நிலை குறித்து அறிய முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்த புயல் சின்னம் தமிழ்நாடு, ஆந்திரம் வழியாக கரையைக் கடக்கலாம் அல்லது மேற்கு வங்கம் - வங்கதேசம் வழியாக கரையைக் கடக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் அதன் பாதையை முன்கணிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் நவ. 22 முதல் 27ஆம் தேதி வரை காற்றின் வேகம் மணிக்கு 40 - 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் சின்னம் மேலும் வலுவடையும்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும்.
இந்த புயல் சின்னத்தால், எங்கெல்லாம் மழை பெய்யக் கூடும், எங்கு கரையைக் கடக்கும் என்பது இன்னமும் கணிக்க முடியாததாகவே உள்ளது.
இது தாழ்வு மண்டலமாக ஒருங்கிணைக்கப்பட்ட பிறகுதான், இதன் பாதையை கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cyclone Senyar is forming in the Bay of Bengal. About the meaning of this name
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.