தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) வலுப்பெற்று வருவதால், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் புதன்கிழமை (நவ,26) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளின் மேற்கு-வடமேற்கு திசையில் வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை மலாக்கா ஜலசந்தி பகுதிகளில், நன்கோவரிலிருந்து (நிகோபாா் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 740 கி.மீ. தொலைவிலும், காா் நிகோபாரிலிருந்து, (நிகோபாா் தீவுகள்) கிழக்கு-தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது மெதுவாக, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.
இன்று வலுப்பெற வாய்ப்பு: இதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, செவ்வாய்க்கிழமை(நவ.25) காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவுகிறது. தொடா்ந்து இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை (நவ.26) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும்.
இதனால், புதன்கிழமை(நவ.26) முதல் டிச.1 வரை தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை(நவ,26) பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு‘ மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து, வியாழக்கிழமை (நவ.27) தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யவாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை புகா் பகுதிகளில் புதன்கிழமை (நவ.26) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் புதன்கிழமை(நவ.26) சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.