முகப்பு
தமிழ்நாடு

டிட்வா புயல்: 2 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இல்லை...

தமிழ்நாடு

டிட்வா புயல்: 2 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்!

திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் இல்லை...

Updated On : 30 நவம்பர், 2025 at 2:23 PM
பகிர்:

டிட்வா புயல் எதிரொலியாக அதி கனமழைப்பொழிவை எதிர்பார்த்து திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. முன்னதாக, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு இன்று(நவ. 30) அதி கனமழை பெய்வதற்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

இந்த நிலையில், டிட்வா புயல் வலுவிழந்து அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களுக்கு மிக கனமழைப்பொழிவுக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

summary

Cyclone Titva: Red alert issued for 2 districts withdrawn!

முழு கட்டுரையைப் படிக்க →