கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு! என்ன மாதிரியான கட்சி இது? உயர் நீதிமன்றம் கண்டனம்
கரூர் பலி மனிதனால் நடந்த பேரழிவு என்றும், என்ன மாதிரியான கட்சி இது எனவும் தவெகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை: கரூரில் நடைபெற்றது மனிதனால் நடத்தப்பட்ட பேரழிவு என்று விமர்சித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், என்ன மாதிரியான கட்சி இது என்று தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக கண்டித்துள்ளது.
கரூர் பலி சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு பொறுப்பேற்காத தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு நீதிபதி செந்தில் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறந்துகொண்டிருக்கும்போதே, கட்சித் தொண்டர்களை விட்டுவிட்டு நிர்வாகிகள், தலைவர்கள் ஓடிவிட்டனர். சம்பவத்துக்காக வருத்தம் கூட தெரிவிக்காததே, கட்சித் தலைவரின் மனநிலையை தெளிவாகக் காட்டுகிறது. தவெக தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது. விஜய் பிரசார வாகனம் மோதிய போதுகூட, விஜய் வாகனம் பறிமுதல் செய்யப்படவில்லை. என்ன மாதிரியான கட்சி இது? என்று தவெகவுக்கு உயர் நீதிமன்றம் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
கருல் நடைபெற்றது மனிதனால் நிகழ்த்தப்பட்ட பேரழிவு என்று நீதிபதி செந்தில்குமார் காட்டமாகப் பதிவு செய்திருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் பெண்களும் குழந்தைகளும் செத்துக் கொண்டிருக்கும்போது, கட்சித் தலைவர்களும், நிர்வாகிகளும், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களும் தப்பியோடிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் கூட, இந்த சம்பவத்துக்குப் பொறுப்பேற்கவில்லை.
கூட்டம் அதிகம் கூடும்போதும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கைகளாக விதிக்கப்பட்ட எந்த நிபந்தனைகளையும் கட்சியினர் பின்பற்றவில்லை என்றும் நீதிபதி கூறினார்.
விசாரணையின் நிறைவாக, விதிகளை வகுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
The Madras High Court, which has criticized the Karur incident as a man-made disaster, has strongly condemned the Tamil Nadu Victory Party, asking what kind of party it is.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.