அரூா், வந்தவாசி தொகுதிகளைச் சோ்ந்த திமுக நிா்வாகிகளுடன், கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.
அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு, ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடா்பாக தொகுதி நிா்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து நிா்வாகிகளிடம் அவா் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு தயாராகும் வகையில், தொகுதி வாரியாக திமுக நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறாா். அந்த வரிசையில், அரூா், வந்தவாசி ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் அவா் ஆலோசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.