அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை: நடிகர் மாதவன்
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
கோவையில் கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய மாதவன், அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.
ஜிடி நாயுடு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடி பழனிசாமியை தவெக தொண்டர்கள் விரும்புகிறார்கள்: செல்லூர் ராஜு
கோவையில்தான் முதல் 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளோம். ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றை மிகச் சிறப்பாக வெளியே கொண்டு வருவோம் என நம்புகிறேன்.
பின்னர் கரூர் விஜய் மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த கேள்விக்கு இவ்வளவு செலவு செய்து கடையை திறந்து உள்ளார்கள், கரூர் குறித்து பேசினால் அது தலைப்புச் செய்தியாக மாறிவிடும் எனவும் அதனால் வேண்டாம் என தவிர்த்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.