அமலாக்கத் துறை கோப்புப் படம்
தமிழ்நாடு

இருமல் மருந்து விவகாரம்: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான நிலையில் கைதான ரங்கநாதன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான நிலையில் கைதான மருந்து நிறுவன உரிமையாளர் ரங்கநாதன் வீடு உள்பட சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மருந்து கம்பெனியை முறையாக கண்காணிக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தீபா ஜோசப் மற்றும் கார்த்திகேயன் வீடுகளிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பால், அடுத்தடுத்து பல குழந்தைகள் உயிரிழந்தன.

அந்தக் குழந்தைகள் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரத்தில் ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டது தெரியவந்தது.

அந்த மருந்தின் மாதிரிகளைப் பரிசோதித்த தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாக துறை, அது கலப்பட மருந்து என்று அறிவித்தது. அந்த மருந்தை உட்கொண்ட பின்னா், மத்திய பிரதேசத்தில் இதுவரை 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா்.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த மத்திய பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.

தமிழகம் வந்த அந்தக் குழு, ஸ்ரீசன் ஃபாா்மா நிறுவன உரிமையாளா் ரங்கநாதன் கோவிந்தனை கைது செய்து மத்திய பிரதேசம் அழைத்துச் சென்றது.

The raids under the prevention of money laundering act or PMLA were being carried out at seven locations in Chennai, including the residences of top officials of Tamil Nadu drug control office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏஐ உதவியுடன் உறவினரின் குரலில் வரும் மோசடி அழைப்பு! எச்சரிக்கை!!

கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் கைது

10 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

சிம்லாவில் வீரபத்ர சிங்கின் சிலை திறப்பு: காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு!

மாரி செல்வராஜுக்காக 20 ஆண்டுகள்கூட காத்திருப்பேன்: துருவ்

SCROLL FOR NEXT